போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கையா
இதை ஏற்காதவன் யாரும் மனிதனா
இளம் போராளியே உன்னைப் பாடாதவன்
உலகம் காணாதவன் போல் வாழும் ஏனைய்யா
பால் மணக்குது தேன் மணக்குது
குடம் குடமாய் பேச்சிலே
ஊர் மனதில் கூன் விழுகின்ற காட்சியா நாட்டிலே
தேள் கடியதனால் வலியென
யார் இருப்பார் வீட்டிலே
தா மருந்தென வலி குறைந்திட
கால் நடந்திடும் ரோட்டிலே
தலை விதியென அவன் செயலென
தெய்வத்தின் மேல் நிந்தனை
எது சரியென எது தவறென
அறிவதன்றோ சிந்தனை
பொது வழியென விதியிருப்பதை மறுதலித்தால் தண்டனை
தனி வழியென தடம் புரள்பவன்
மனிதனில்லை நண்பனே
தாய் மடியில் சேய் அழுவது
பால் அருந்திட அல்லவோ
மான் கொம்புகள் கூர் வாளென
இருப்பதை நான் சொல்லவோ
ஏர் முனையிலும் தீ பரவுது
பார் சமுத்திர வீதியை
ஏன் எதற்கிந்த போர் நடக்குது
கேள் உன் மன நீதியை
எழுத்து இசை
இ மு வெற்றிவளவன்