Tuesday, July 29, 2025

ஆத்தா உன் சேலை

ஆத்தா உன் சேலை ஆகாயத்தை போல

தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட

ஆத்துல மீன் புடிக்க அப்பனுக்கு தலை துவட்ட

பார்த்தாலே சேர்தணைக்க தோணும் - நான் செத்தாலும் என்னை போத்த வேணும்.


நான் இடுப்பிலே கட்டிகிட்டு நீச்சல் பழகினதும்

உன் சேலை தானே வண்ண பூஞ்சோலதானே

வெறும் தரை விரிப்பில நான்  படுதகிடந்ததுவும் 

உன்சேலை தானே வண்ண பூஞ்சேலைதானே

ஈர சேலை காயும்போது வானவில்லா தெரியும்

இத்து போன சேலையிலே உன் சோக கதை புரியும் 

கஞ்சி கொண்டு போகையிலே சும்மாடா  - இருக்கும் - உன்

சேலை கட்டி இறைச்ச தண்ணி சக்கரையா இனிக்கும் (2) - ஆத்தா உன் சேலை


அக்கா கட்டி பழகினதும் ஆடு கட்டி மேச்சதுவும்

உன் சேலை தானே வண்ண பூஞ்சோல தானே

வெக்கையில விசிறியாகும்

வெயிலுக்குள்ள குடையாகும் 

உன் சேல தானே வண்ணப் பூஞ்சோலைதானே

பொட்டிக்குள்ள மடிச்சு வெச்ச

அழகு முத்து மாலை

காயம்பட்ட விரல்களுக்கு

கட்டு போடும் சேலை

மயிலிறகா உன் சேலை

மனசுக்குளே விரியும்

வெளுத்த சேலை திரி

வெளக்கு போட்டா எரியும்.(2)

ஆத்தா உன் சேலை....


No comments:

Post a Comment