Tuesday, July 29, 2025

கண்ணுக்கு எதிராக நடக்கிறத பார்த்து

கண்ணுக்கு எதிராக நடக்கிறத பார்த்து 

கவலைப்படாதவன் மனுஷன் இல்லை

காதுக்குள்ள செய்தி வந்த பின்னும் அதை

கவனிக்க மறுப்பது ஞாயம் இல்லை

பல்லும் சொல்லும் இருந்தும் பேசாதவன் முகத்தில் 

பள்ளமாய் இருப்பது வாயும் இல்லை


கோயில் இல்லாத ஊரு குடியிருக்க ஆகாதுன்னு

கொண்டாட்டம் போட்டு அதை கட்டுறோம் பத்து

பஞ்சாங்கம் பார்த்து முடிவு கட்டுறோம் இங்கே

கவலையும் தொலையில் கண்ணீரும் குறையல 

கட்டிவச்ச கோயிலிலே முட்டுமறோம் - இன்ப

கனவு உலகத்திலே சொக்குறோம்

கோட்டையாட்டம் கோயில் இருந்தும்

சனங்க குடியிருக்க முடியலப்பா 

செக்குமாடு போல நடக்கறியே போகும்

திக்குத் தெரியாம முழிக்கிறியே



யமுனை ஆற்றங்கரையில்

யவனமாய் கொலுவிருக்கும்

தாஜ்மஹால் இந்தியாவின் சின்னம் தான் - மதுரை

ஆயிரம் கால் மண்டபமும் சின்னம்தான் அஜந்தா

எல்லோரா ஓவியமும் குதுப்பினார் கோபுரமும் பாரதத்து பண்பாட்டு சின்னம்தான் அதுவே

மாமல்லன் சிற்பங்களும் ஒண்ணுதான்

அக்பருக்கும் கோட்டை இருக்கும் 

கௌதமராம் புத்தருக்கும் வாழ்க்கை இருக்கும்

இதுக்கு பேரு தாண்டா இந்திய நாடு - இது

இல்லாட்டி நமக்கு இங்கே ஏதுடா பேரு


No comments:

Post a Comment